என்னங்க .. காபி ....."ஷ்யாம் கண்விழித்தான் ....
"காபிய அங்க வை.....நீ இங்க வா ..."
"முடியாது...." "நான் குளிச்சாச்சி .....
அதான் சொல்றேன்...இங்க வா....
ம்கூம்...முடியாது...ராத்திரி என்ன சொன்னீங்க ....
என்ன சொன்னேன்....?
அம்மா,அப்பாவை பார்க்க போறதா பேசிகிடோம்...?
ஆமாம் ..சொன்னேன் ..ஆனா போகவேண்டாம்....
ப்ரியா முறைத்தாள்...போய்விட்டாள்.....
ஷ்யாம் காபியை குடித்துகொண்டே ...நியூஸ் பேப்பரை விரித்தான்.....
வென்னீர் ரெடியா இருக்கு.....? கிச்சனிலிருந்து வந்தது குரல்....
பேப்பரை போடுவிட்டு....அமைதியாய் பாத்ரூம்குள் போய்விட்டன்....
குளித்துவிட்டு திரும்பி வரும்போது...ப்ரியா ஜன்னலோரம் நின்றுகொண்டிருந்தாள்
பிரியா இங்க என்ன பண்றே...ம்?
சும்மா நிற்கிறேன்.....
ஜன்னலுக்கு வெளியே எதுமே இல்லை ..சும்மா அங்கேயே வெறிச்சி பார்த்துகிட்டே இருகிறே....?கோபமா இருக்கியா ?
கொஞ்சம் வெயிட் பண்ணு ...தோ...வாறேன்.....
திரும்பி வரும்போது இரண்டு கப் காபி ....
ப்ரியா காபி சாப்பிடு ...சுகர் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும்....ப்ச்...காபிய குடி ப்ரியா ..பேசலாம்....பிளிஸ்...."வாங்கி கொண்டாள்....
ப்ரியா நமக்கு கல்யாணம் முடிஞ்சி வெறும் பத்து நாள்தான் ஆகிருக்கு.....
கல்யாணம் முடிஞ்ச நாள்ல இருந்து புல் டே உன்கூட நான்..இல்லை...சோ ..இன்னொரு நாள் அம்மா வீடுக்கு போகலாம்...ம்?
பிளிஸ் ப்ரியா...இன்னைக்கு நீ இந்த மாதிரி இருக்ககூடாது....ஒகே..ஏதாவது பேசலாமா....சொல்லு என்ன பேசலாம்...ம்?
ப்ரியா புன்னகைத்தாள்....காபியை குடித்துகொண்டு உதட்டை நனைத்துகொண்டாள்...
தேங்க்ஸ் ப்ரியா .....
எதுக்கு...."..."கொஞ்சம் சிரிச்சியே....?ப்ரியா வெட்க்கபட்டவள் ...
பாருங்க இந்த மாதிரி கிண்டல் பண்ணினா...நான் எதுமே சொல்ல மாட்டேன்.....
கே கே ....சொல்லு உனக்கு என்ன என்ன பிடிக்கும்.....
ம்ம்ம்... அம்மா ,அப்பா ...நீங்க ..இந்த வீடு...நம்ம கிச்சன்...இப்போதைக்கு இவ்ளோதான்...."உங்களுக்கு....?"
"ஹ ஹ ஹ இவ்ளோதான....?" "அம்மா ,அப்பா பிடிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது....
எனக்கு மணிரத்னம் பிலிம் ரொம்ப பிடிக்கும்...விக்ரம் பிடிக்கும்...நான் ஒரு சினிமா பைத்தியம்...
அப்புறம் என்னோட பைக் ...,இந்த வீடு ..நீ தர்ற பெட்காபி.....வீடு முழுசும் கேட்கின்ற உன் கொலுசு சத்தம்.....
ஹேய்...ப்ரியா அங்க பாரு மழை வருது.....
அதுக்கு என்ன இப்போ....ம்?
பிளிஸ் ப்ரியா ...பைக்ஐ மெதுவா ஓடுறேன்...எங்கேயாவது போய்ட்டு வரலாம்....
ஐயோ நான் மாட்டேன்பா ...இந்த ஊரு டிராபிக்ஜாம் தங்க முடியாது....அதும் இந்த மழைல...முடியாது....?
சரி ...சினிமா போகலாம்....மை பேவரைட் ஆக்டர் விக்ரம் நடிச்சது....&மணிரத்னம் மூவி ..பிளிஸ் போகலாம்...
நோ ...முடியாது...விசில் சத்தம்...இருக்க முடியாது....தலை வெடிச்சிடும்....வேண்டாங்க....
ஷ்யாம் பேசவில்லை. மீதம் இருந்த காபியை குடித்துவிட்டு. அமைதியாய் ஜன்னலோரம் போய் நின்றான்.
இப்போ மட்டும் இங்க ஏதும் தெரிதா என்ன ..?நீங்க மட்டும் இங்க வந்து நிற்கலாமா ?
கொஞ்சம் உரசாமல் நிற்கிறியா....?ப்ரியா மேலும் வேகமாக தோள் உரசினாள்....
நான் என்ன பண்றது.....எனக்கு பிடிக்கணுமே...?ஒரு பொண்டாடிக்கு என்ன பிடிக்கும்னு நீங்க தெரிஞ்சிவச்சிருக்கணும்....?
அதான் தெரியுமே.....உனக்கு பிடிச்சது உன் அம்மா வீடு....?
கோபமா இருக்கீங்களா....?கன்னத்தில் முத்தமிட்டவள் ..."நான் சொல்லவா ...?
உன்களுக்கு குக் பண்ண தெரியும்ன்னு சொல்வீங்களே...?இன்னைக்கு ஒரு நாள் நீங்க குக் பண்ணுங்க...நான் சாபிடுறேன்...ம்?
போடி என்கிட்ட பேசாதே..நான் கோபமா இருக்கேன் ....
வேற ஏதாவது கேளுங்க ...இந்த டைம் மறுக்க மாட்டேன்....
ஷ்யாம் அவளை பார்த்தான்.....ப்ரியா ரொம்ப நாளா ஒரு ஆசை....இப்போ சொல்லவா /..?
ம்...
கொஞ்சம் வெயிட் பண்ணு...ப்ரியா தோ வர்றேன்.....அறையின் வலது கோடியில் டி.வி இருந்தது...கூடவே சிடி ப்ளேயர்.....
நொடி பொழுதில்....அறையெங்கும்...மிதமான பாடல் ஓலி....
இது எந்த படத்திலிருந்து ....
ஹேய் இது கூட தெரியாதா ?....இது மணிரத்னம் மூவி....,மோகன் ,ரேவதி நடிச்சது..13 டைம் பார்த்திருக்கேன்....
பனி விழும் இரவு .....நனையிது நிலவு....பாடல் ஓலி அறையெங்கும் நிரம்பி வழிய ..."என்ன பண்ண போறீங்க ஷ்யாம்...?"
....ப்ச்..பக்கத்துல வா .... dance with me .... வா ஆடலாம்....
பட் எனக்கு ஆட தெரியாதே ஷ்யாம்...."
" நான் மட்டும் என்ன டான்ஸ் மாஸ்டரா ...இங்கிலீஷ் படம் பார்த்திருக்கியா ...?
அதில இப்படித்தான் லவ்வரஸ் இப்படிதான் காதலை வெளிபடுத்துவாங்க....."
ஆட தெரிலனா..... நோ ப்ராப்ளம் ப்ரியா...நமக்கு பிடிச்ச மாதிரி ஆடலாம்....கம் பாஸ்ட் ....
ப்ரியா அருகே வர அவளை இடுப்போரம் அணைத்துகொண்டான்....இப்படி லேசா அசைஞ்சா போதும்..ப்ரியா .....
இப்படிதான்..... தெரியாதுன்னு சொன்னே...ம்?இவ்ளோ அழகா ஆடுறே.....?
ப்ரியா அவன் விழிகள பார்த்து சொக்கி போனாள்..."ஷ்யாம் இந்த நிமிஷத்தை என்னால மறக்க முடியாது... லவ் யு ஷ்யாம்...
மீ டூ ...ப்ரியா ..யு konw ப்ரியா...இந்த பட்டை...முதன்முதலா பார்த்த போது இந்த மாதிரி டான்ஸ் ஆடனும்ன்னு நினச்சது....எவ்ளோ வருஷம் கழிச்சி... இன்னைக்கு நடந்திருக்கு பார்த்தியா ...?
ம்.....?
ஷ்யாம்..தன் இரு கரங்களால் அவள் முகத்தை ஏந்திகொண்டான்..."என் கைல ஒரு பூ பூத்திருக்கே பார்த்தியா..?
ம்...?என்றாள் ப்ரியா....
ஹேய் என்ன நீ ...எதுமே பேச மாட்டேங்கிறே....?உனக்கு பிடிக்கலியா ..?
நான் அப்படி சொன்னேனா.....?எப்போவுமே உங்க கதகதப்பான அரவனைப்புக்குள்ளே நான் இருக்கணும்...
இருக்கலாம்.....ப்ரியா ....
ஷ்யாம் செந்தில்னா...யாரு....?
தெரியாதே.. எதுக்கு...?
உங்க பிரெண்ட் எதுக்கு உங்களை செந்தில்ன்னு கூப்பிடனும்....?
ஹேய் இங்க நீயும் ,நானும் மட்டும்தான் இருக்கோம்...கதவு பூட்டி இருக்கு...?
ஐயோ அங்க பாருங்க ...நான் போறேன்.....பாய் ....
ப்ரியா ...அவன் என் பிரெண்ட் இல்லமா...?..ஐயோ அவன் கூட நான் சண்டை....பிளிஸ் ப்ரியா போகாதே....
ப்ரியாயாயாயாயாயாயா....................??????/
ப்ரியா போகும் போது கடைசியா சொன்ன வார்த்தை......?
கண்ணை நல்லா திறந்து பாருங்க .....
ஷ்யாம் கண்ணை திறந்த போது.....கையில் தண்ணீர் பாட்டலோடு நின்றுகொண்டிருந்தான் ....
என்னடா .......?
நீதாண்டா சொன்னே...?காலைல இன்டர்வியு இருக்குது....எழுப்பு...எளும்பவில்லேன்னா தண்ணீர் ஊத்த சொன்னியே ..
அதான் தண்ணி பாட்டல்.....புரியாமல் விழித்தான் நண்பன்....
உன்னை பிரெண்டா அடைஞ்சதுக்கு ....நான் ரொம்ப வருத்த படுறேண்டா.....
ஏன்டா நீ சொன்னதை தானே செய்தேன்......?
டேய் போடா நான் கோபமா இருக்கேன்.....போய்டு ....ப்ளீஸ் ...
அதுக்கு ஏன்டா கண்கலங்குறே......?
அன்புடன் ....
ஆசிர்
No comments:
Post a Comment