Monday, June 21, 2010

இப்படிக்கு....

நேற்றைய தோழா ......
உன்னை என்னவென்று எழுதுவது ......
யோஸித்ததில்.....நேரங்கள் கரைகிறன ...
பள்ளிக்கு புறப்படும் போதெல்லாம் எனக்காக ...காத்துநிற்கும் உன்னை ...நீ போ...என்றபோது .....நீயும் வா ....என்று அடம் பிடித்ததையா ....
மல்லிகை பூ...பிடிக்கும் என்றேன் ......
பிறந்தநாள் பரிசாக ....நீ தந்த மல்லிகை கன்று ....
ஜோடி மீன்களை வாங்கி வந்து ...
நம் இருவருடைய பெயரை..மீன்களுக்கு சூட்டினையே ....
மழைக்கு ஒதுங்கிய நேரம் .....
குளிரில் நான் ......பார்த்தும் பாராமல் நீ .....
விழிகள் சிறகை படபட அடித்துக்கொள்ள .....
இதயம் துடிக்க மறந்து செயளிலன்த்து போக .....
இரண்டு பேருக்கு இடம் விட்டு நின்ற உன்னை என்னவென்று சொல்வேன் .....
எதாவது சொல்லி அடிக்கடி வெட்கப்பட வைக்கிறாயே .......
அதையும் ...தலை சாய்த்து அழகாய் ரசிக்கிரையே ...
மணிகணக்கில் நிலை கண்ணாடி முன் நிற்கிறேனே ...
எதிரில் நான்தான் என்று தெரிந்தும் ......
தொலைந்து போன கொலுசை தேட மனம்மில்லாமல் ....
நீ அருகில் நின்றுகொண்டிருந்தாலும் மனம் உன்னையே தேடுகிறது .......
வாசலில் உன்னை கண்டதும் .....
கதவுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறேன் ....
சரி வா என்று கையை பிடித்த போது ......
அம்மா உன்னை தனியாக போக சொன்னதும் ....
கண்ணீர் மல்க சென்றாயே .......
அல்லிப்பூ ஒன்று பூத்தது உனக்கு தெரியாதா.......?

No comments:

Post a Comment