புற்களுக்கு பனித்துளிகள் சுமையாகுமா ?........
கிளைகளுக்கு இலைகள் சுமையாகுமா ?........
உன் பாதங்களுக்கு கொலுசு சுமையாகுமா ?........
அழகுக்கு ,அழகு சேர்க்கும் ......உதட்டோர மச்சம் சுமையாகுமா ?........
உன் பெயருக்கு பக்கத்தில் என் பெயரை கிருக்குவதில் .....
விரலுக்குதான் வலிக்குமா ?......
உனக்காக காத்திருந்த ..நிமிடங்கள் ....திரும்ப கிடைக்குமா ?
நீயும் நானும் பேசிய ரகசிய பாஷைகள் ...இருளுக்கு புரியுமா ?
குளித்து முடித்தும் என் அருகில் வந்து தொந்தரவு பண்ணும் போதெலாம் நிலை கண்ணாடி இன் கோபந்தான் தீரூமா ?.....
எச்சில் காயாத முத்தங்கள் கணக்கில் வருமா ?
வீட்டருகே வரும்போதுமட்டும் ,உன் கொலுசு பழுது ஆகிவிடுமே ........
இப்போதாவது.......சரியாகிவிட்டதா ?........
நான் கடைதெருவுக்கு செல்லும் போதெல்லாம் ..........
உன் பேனாவின் மை திர்ந்துவிடுமே ...... ?
கன்னத்தில் பருக்கள் வரும்போது .....
வேணுமென்றே ..... சந்தேகம் கேட்பாயே ........சந்தேகம் தீர்ந்து விட்டதா ?சிறிதும் வெட்கப்படாமல் .......
கனவில் வந்து போனதைஎன்னிடமே சொல்லிவிட்டு ஓடிபோவாயே ......?கனவுகள் வருவதில்லையா ......இல்லை ..அதில் நான் வருவதில்லையா ?
உன் பார்வைக்கு அர்த்தம் கேட்டால்........இது கூட தெரியாதா?என்று ,தலையில் அடித்துவிட்டு வலியை போக்குவதாக ...
தடவிக்கொண்டே இருப்பாயே.......?
வலி போய்......ஆசை தீ பற்றி கொள்ளுமே........?
பற்றி கொண்டதுமே ....நடுங்கியவாறு விலகி போவாயே ?
நீ வாங்கிவந்த ஆடையை அணிய வேண்டும்மென அடம்பிடிப்பியே.....
அணிந்தவுடன் ....சிரித்துகொண்டே அழுவாயே....மறக்க முடியுமா?.......
மழை நீரில் நனைந்து இர விழிகள் படபடக்க ...
கேட்காமல் தேநீர் கொடுக்கும் உன்னை.......
என்னவென்று சொல்வது ............?அம்மவுக்குதெரியாமல் ....தலைதுவட்டும்போது ......
கண்களையே பார்த்துகொண்டிருப்பாயே ......
அர்த்தம் தெரிந்துதான் பார்த்தாயா?இல்லை ........உனக்கும் தெரியாதா?
கருப்பு பொட்டு வைக்கும்போதெல்லாம் .......
நான்தான் உனக்கு நிலை கண்ணாடியோ ??
தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தபோது .....
பரிசு கேட்டாயே....தரும்போது .....வாங்காமல் ........
குனிந்த தலை நிமிராமல் .........
மவுனமாய் ......கால்லால்....கோலம் போட்டாயே ?
நீ எதிர்பார்த்த பரிசுதான் என்ன ?நான் கேட்ட போது ....
வினாடி கூட யோசிக்காமல்.....
நீ தந்துவிட்டு ஓடி போன எச்சில் பரிசை மறக்க முடியுமா
நீயும் நானும் வெகுதூரம் நடக்க ......திரும்பி பார்த்தபோது ...
இருவர்வரை தவிர யாருமே இல்லையே........?
நம் இருவற்காக .....அதேபோல் ஒரு உலகம் வேண்டும் என்றாயே .......?கடலும் அதை ஆமோதித்தது .......இருவருக்குமே கால் வலித்தபோது ...உன்னை மட்டும் ...தூக்க சொல்லி அழுதாயே ?
நான் பயந்தபோது .....இங்கே யாருமே இல்லை..என்று ...
நம் தனிமையை மறுபடியும் ......உணர்த்தினாயே......
நான் அருகில் வந்த போது .....பிடிக்க சொல்லி ஓடினாயே ......வேண்டுமென்றே ....மெதுவாக ஓடி என்னிடம் மாட்டிகொண்டாயே ?
விழிகள் படபடக்க ....இதழ்கள் ஆசையில் தேன் ...
வடிக்க நான் கொடுத்த முதல் முத்தம் .......
மறுநாள் ....காய்ச்சலில் படுத்துக்கொள்ள .......
அருகே கூபிட்டு நான் கொடுத்ததை எனக்கே தந்தாள் .......
சின்னதிரை மெகா தொடர் போல நீண்டுகொண்டே போகும் உன் நினைவுகள்................
உண் நினைவால் நான் சிந்தும் கண்ணிர்த்துளிகளிலும் பௌர்ணமியாய் உன் முகம்.........
நினைக்க சொல்லிகொடுதவளே............
உன்னை மறக்க சொல்லி கொடு..........
பட்டுபோன என்னை உன் கைகளால் வெட்டி சாய்த்துவிடு........
No comments:
Post a Comment