Monday, June 21, 2010

என் இரவுகள்.......

இலை நுனி விழும்பில் விழ காத்திருக்கும் பனித்துளி ..........
தூங்குமூஞ்சி மரங்கள் ....கண்விழிக்கவில்லை .......
காலை தென்றலில் குளிர் மிச்சமிருந்தது .........
சூரியன் உதித்தபிறகும் போக மனமில்லாத நிலா ......
மேகங்கள் இலவம்பஞ்சாய் ...ஆங்கங்கே ...பரவிகிடக்க .......
மயானத்தில் பூத்த பூக்கள் ...உதிரப்போவது தெரியாமல் .........
தனிமை என்னை கொல்கிறது.............
இலக்கே தெரியாமல் நடக்கிறேன் ....பாதைகள் தொடர்கிறது ...
ஆவலோடு ஏமாற்றமும் .....ஓட்டிகொள்கிறது ........
மறக்க நினைத்த தருணங்கள் ....உன் நினைப்பில் கரைகிறன ......
என் பெயரை எழுத்தும் போது.....
மறந்தோ ,தெரிந்தோ ...கூடவே உன் பெயர் .....
இரவு பகலாகிறது ......இமைகள் முட தோன்ற வில்லை ....
எதிரில் உன் பிம்பம் ......
விட்டு சென்று வருடங்கள் கடந்திருந்தாலும் .......
இன்றும் தெரு முனையில் காத்திருக்கிறேன் .......
காத்திருப்பில் ...தெரிகிறது காதலின் உச்சக்கட்டம் ........
பாதி கிழிந்து தொங்கிய சுவரொட்டியை போல் ......என் இதயம் ......
நீ விட்டு சென்ற நினைவுகள் ....
இன்னும் தெரு முனையை கடக்கவில்லை ......
ஏனோ நம்பிக்கை ...இன்றும் வராத நீ ...
நாளை வருவாய் என ....
ஒவ்வொரு விடியலுக்காக காத்திருக்கும் என் இரவுகள் .......

No comments:

Post a Comment