மாலை நேரம் சின்ன அதிசயம்.....
துவானம் முத்தமிட ....அவளின் தரிசனம்......
பல மாத தவத்திற்கு பிறகு ....
கூந்தலிருந்து எனக்காக தவறிய மல்லிகை ....
உன் நிழல் கூடவே நடந்து ...
சந்தோஷபட்ட நாட்கள் ........
தோள்கள் உரசிக்கொள்ள ....ஏங்கிய தேகம்......
நடு இரவில் ஒத்திகை பார்த்துக்கொண்ட
கேவலமான இரவுகள் ......
காலையில் பூத்த பூக்கள் வாடி போயிருக்க ....
மாலையிலும் ....காலையில் பூத்த பூவாய்...
மலர்ந்திருக்கிறேன் உனக்காக .........
உன் தோழியிடம் நலம் விசாரித்து .....
உன்னை பற்றி விபரம் அறிந்து ......
உனக்காக வாங்கி தர நினைத்து ....
தராமல் என்னிடமே வைத்துக்கொண்ட ...
பாரதியார் கவிதைகள் .......
நண்பன் சொன்ன அறிவுரை ...
நான்காய்,எட்டாய் மடிக்கபட்ட
காதல் கடிதம் சட்டை பையில்....
வருடி சென்ற கடல் காற்று.........
கடல் அமைதி காக்க .....
இதயத்தின் ஓசை ....அனைவரையும் ..
திரும்பி பார்க்க வைத்து போல் பிரம்மை ..
தோழிகளோடு நடந்து சென்றாலும் .....
கோடி கால் தடத்தின் ....நடுவே .....
அழகாய் உன் கால்தடங்கள் ......
உதடுகள் தந்தியடிக்க ....
கால்கள் மண்ணில் புதைந்து கொள்ள ...
தேகம் வெட்டி போட்டத்தை போல் துடிக்க .....
முதுகில் வியர்வை துளிகள் ....ஊசியாய் குத்த ....
மெல்லமாய் கூபிட்ட போது .....அவள் திரும்பவில்லை
அவள் பெயரை வீசிய காற்று ...கொண்டுபோனது
இதுதான் என் கடைசி நாளாய் நினைத்துக்கொண்டு
அவள் எதிரில் நான் ..ஏதேதோ சொல்லி கடிதத்தை நீட்டி ..
அதை அவள் பல துண்டுகளாய் ...கிழித்து...
முகத்தில் எரிந்தது ..அத்தனையும் கனவாய் இருக்ககூடாதா ..... ?
அவமானம் ஒட்டிக்கொள்ள ...
.ஓடிபோய் அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதது ....
பொய்யான காரணத்தை சொல்லி கதறி அழுதது ...
மறுநாள் விடியலும் அழகாகவே இருந்தது அவளை போலவே ...
புதிதாய் மீண்டும் காதல் கடிதம்....
ஐந்து நாட்கள் தாடியோடு....
பழக்கபட்ட பேருந்து நிறுத்தத்தில் .....
இன்றும் உனக்காகவே.........
No comments:
Post a Comment