Sunday, June 20, 2010

தொடாமலே ஸ்பரிசத்தை உணர்கிறேன்.....
இதழ் பதிக்காமல் ...கள்ளுரும் கன்னங்கள்...
இமை மூடும் போதெல்லாம்....
புதுபுது கனா காண்கிறேன்...
உன் விரலை பற்றிகொண்டு..
யாரும் இல்லாத ஊரில் ....
தோளோடு தோள் உரசிக்கொண்டு...
உனக்கும் எனக்கும் தெரியாது ...
நாம் எங்கே போக வேண்டும் என்று
உன்னை நேரில் காணும் போதெல்லாம்.....
போனா நிமிடமும்....அடுத்த நொடியையும்....
மறந்துவிடுகின்றேன்...
பூட்டிய அறைக்குள்...
நிலை கண்ணாடி முன் நின்று ....
ஏதேதோ பேசி ஒத்திகை பார்கிறேன்....
வீசிய வாடை காற்றில் ....
தேகமெங்கும் பட்டுபூச்சிகளின் ஊர்வலம்..
ஜன்னல் வழியாய் ஊடுருவிய தென்றல் .....
குண்டு ஊசியாய் குத்தியது...
அம்மா அப்பா கோவிலுக்கு கூட்டிசென்றாலும்
சாமியிடம் உனக்காக மட்டுமே வேண்டுகிறேன்.....
கண்ணு தெரியாத பாட்டியிடம்....
நான் ஆடிய பரதநாட்டியம்......
கைதட்டல் கேட்டு திரும்பிய
என் விழிகளும்...தேகமும் ...
வெட்க்கத்தால்
வெடவெடத்து போனது உன்னை பார்த்து....
மூடி வைத்த காதல் பூத்து கொலுன்கியது....
வாடாது காத்திருக்கு....உன் தீண்டலுக்காக ....
நிலவை தொலைத்த அமாவாசை..இரவில் ...
உன் நினைவுகளோடு ......
என் பௌர்ணமி கனவுகள்.....

No comments:

Post a Comment