தென்றலுக்கு தூது அனுப்பினேன்.........
உன்னை வருடிவிட்டு சென்றதா .......
ஆமை போல் ஊர்ந்து சென்ற மேகத்திடம்......
நான் சிந்திய கண்ணீர்துளிகள் ......மேக மழை சிந்தியாதா ........
வெட்க்கத்தில் சிவந்திருந்தது காலை சூரியன் .....
உன்னை சந்தித்ததால் சின்ன மாற்றமோ .......
ஏக்கத்தில் பாதியாய்...உருகி போனது பால்நிலவு .....
என்னை போலவே .........நீ எந்த லோகத்தில் இருக்கிறாய் .....
யாரை அனுப்புவேன் தூது சொல்ல ......
பூட்டிய அறைக்குள் தவம் இருக்கிறேன் .......
அவ்வப்போது வந்து சென்ற மேகத்திடம் பதில் இல்லை ....
ஊர்ந்து சென்ற மேகங்கள் ....காணாமல் போய்விட்டன .....
கோபத்தில் சுட்டெரிக்கும் காலைசூரியன் .....
ஜன்னல் கம்பிகளில் தங்கிய மழை துளி ....சோகத்தில் .....
இறுதிவரை உன்னை காணாத ஏக்கத்தில் அமாவாசை இரவு .....
இரவில் பூத்த பூக்கள் அனைத்தும் கல்லறைக்கே சென்றன .....
இரவானால்....இறந்துவிடுகிறேன் ......
விடிந்ததும் விளித்துகொள்கிறேன்.......
மரணமே என்னை அணைத்துகொள்........
மேக ஊர்வலமே ......என்னவளிடம் .....கூட்டிசெல்......
இருண்டு போன என் உலகில் ...
வின்மினி பூச்சிபோல் புள்ளியாய் அவள் நினைவுகள் ..........
No comments:
Post a Comment