Sunday, June 20, 2010

முற்று புள்ளி .......

அன்புள்ள சித்ரா என்று ஆரம்பித்து .....
அதற்க்கு மேல் எழுத தெரியாமல்.....
பல்லால் பேனாவை செல்லமாய் கடித்துகொண்டேன் .....
வார்த்தைக்கு பஞ்சமாகிபோனது ....
ஜன்னலருகே அமர்ந்த போது ...
முகவரி தெரியாத தென்றல் முத்தமிட்டு சென்றது
இமை மூடி ...யோசித்தேன் ....
சில வருடங்கள் முன்பு ....
இதே திருவிழா காலம்
எல்லா வீடு சுவர்களுமே பளிச்சென்றிருந்தது
தெரு கோடியில் போய் நின்றிருந்தேன் .....
நகத்தை கடித்து துப்பிய போது பின்னந்தலையில் யாரோ அடிக்க திரும்பினேன்....
அப்பா நின்றிருக்க .....இங்க என்னடா பண்றே .....
திருதிருன்னு விழித்தேன்....
என்னடா ஆச்சி உனக்கு ...?
அத்தை ,மாமா 2 மணிக்கு வரதா சொன்நீங்களேபா....வரலை....?
அது விடியற் காலை 2 மணிக்கு....வா இங்கல்லாம் இப்படி நிற்க கூடாது....
நீ சாப்டியா ...?இல்லை என்று தலையாடினேன். ....வா போகலாம் என்றார்...
வீடிற்கு போய் சாப்பாடு எதிரில் உட்கார்ந்து கொண்டு ....எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருக்க ....
டேய் உனக்கு பிடிச்சதுதான ....அப்புறம் ஏன் சாப்பிடாமல் இருக்கே....? அம்மா புரியாமல் கேட்டாள்...
அப்பா வாயில் சோற்றோடு ..ம்ம் சாப்பிடு என்றார் ....தங்கை சாப்ட்டு முடித்திருந்தால்.....
"நான் என்னோட ரூமுக்கு போறேன்...."
"இது என்னடா புது பழக்கம்....."
"அவனை விட்றி நீ போடா...." ஆனா ஒன்னு விடாமல் சாப்டனும்
அப்பா வந்து பார்ப்பேன்.. ம் போ "
என் அறைக்கு போய் சாப்பிட பிடிக்காமல் .....
காலையே சுற்றி சுற்றி வந்த நாய் குட்டிக்கு சாப்பிட சொல்லிவிட்டு...
ஓடிபோய் என் ஸ்கூல் பேக்ஐ திறந்து
என்னுடைய 2 ஆம் கிளாஸ் பாடப்புத்தகத்தை திறந்து
நடு பக்கத்தில் இருத்த அந்த புகைபடம்....
இமையாது பார்த்தேன்.....
1 வது படிக்கும் போது சித்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைபடம்
பளபளக்கும் பச்சை கலர் பாவாடை ,
அத்தையின் தங்க சங்கிலி.....
காது வரை புன்னகைத்தாள்....
நான் அவளையே பார்த்துகொண்டிருந்த புகைபடம்...
அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ...
நாயை விரட்டி சோற்றை மேசை மீது வைத்துவிட்டு ...
தண்ணீர் குடித்துகொண்டே ....
"என்னப்பா "....
அப்பா என்னை தாண்டி சோற்றை பார்த்தார்....
" ம் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு சாப்டுறு...."
"சரிப்பா "
அப்பா போய்விட , நாய்க்கு சோறை வைத்துவிட்டு...
கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தேன்.....
இப்போதே படுத்தத்தான் சித்ரா வரும் போது முழிச்சிருக்க முடியும்....
வெகு நேரத்திற்கு பிறகு தூங்கிபோனேன்....
விழித்த போது அருகில் அழகான பொம்மை....
புரியாமல் கடிகாரத்தை பார்த்து திடுக்கிட்டு போனேன்....
5 .25 சித்ரா வந்தாச்சா.....
இது எனக்காக வாங்கி வந்தா பொம்மையா ..?
பொம்மையிடம் ஏதேதோ பேசிவிட்டு
ஹாலில் பேச்சி சத்தம் கேட்க
ஓடி போனேன் ....அம்மா நின்றிருந்தால் ....
அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டு ...
மெல்லமாய் சித்ராவை பார்த்தேன்....
அவள் சிரித்தாள் .முகத்தில் வெட்கம் படர மீண்டும் ஒளிந்துகொண்டேன்....
அம்மா என்னிடம் குனிந்து "அத்தை .மாமா எப்போ வந்தீங்க ன்னு கேளு...."
நான் வெட்கப்பட ....அம்மா தலையில் கொட்டினாள்
விடுமா சின்ன பயனுக்கு என்ன தெரியும்.....
"காபி வச்ச்ருக்கேன் போய் குடி.... போ "முறைத்தபடி சொன்னாள்....
"2 மணிக்கு வருவாங்கன்னு எனக்குத்தான் தெரியுமேமா ... ?"
"டேய் போ போய் முகத்தை கழுவிட்டு வா...." அப்பா சொல்ல......
"நீ ஏன்மா என்னை எழுப்பலை ம் ?"
"என்ன சொல்றான் உன் பய ...ம்?"
"ஒன்னும் இல்ல அண்ணி...."
நீங்க வரும்போது நான் அவனை எளுப்பலையாம்?"
"ஆமா பெரிய மனுஷன் ..உடனே ஸ்டேஷனுக்கு வண்டி கொண்டு வந்திருப்பான்...".
ஹ ஹ அஹ ஆஹா எல்லோரும் சிரிக்க ....
எதுமே கேட்க வில்லை....சித்ரா சிரிப்பது போல கேட்டது ...
ஆனால் அவள் சிரிக்கவில்லை.....
முகம் கழுவ போனேன்....ஏதோ யோசித்தேன்....
ஆடையை களைந்து குளித்தேன்.....ஏனோ குளிர்ந்த நியாபகம் இல்லை....
யாரோ கதவை தட்ட "அம்மா டவல் கொண்டு வா "என்றேன்....
மீண்டும் தட்ட ....
திறந்தேன் அம்மா .....நின்றிருந்தாள் ....கூடவே சித்ரா ...
"என்னம்மா இது ?"இவள் இங்க ஏன் வந்தாள்..."
நான் உன்கிட்ட தான் டவல் கேட்டேன்...."?
உன்னை எத்தனை தடவை சொல்றது குளிக்கும் போது டவல் கட்டிகொன்னு ம் "?
நீ டவல் கேட்டது ..என்கிட்ட இல்ல சித்ரா கிட்டத்தான் அதான் கொண்டு வந்திருக்காள் " ?
வேகமாய் டவலை கட்டிகொண்டேன்.... ....
சித்ரா சிரிக்க......எனக்கு கேட்கவில்லை.......
வெகு நேரம் கழித்து......
சித்ரா வாங்கி வந்தா பொம்மை எனக்கு இல்லையாம்....
தங்கச்சிக்காக .....அவள் அதை பிடுங்கிக்கொண்டால் அழுதேன்....
"நீ என்ன சின்ன பையன்னா ம்....?"அப்பா உனக்கு துப்பாக்கி வாங்கித்தரேன்.....குடுத்துரு "
அதை வச்சி உங்களை சுடனும்....."என்றேன் அம்மா அடித்தாள் அழுதேன் ....
அடித்ததற்காக அழவில்லை......
மறுநாள் திருவிழா கூட்டத்தில் நானும் சித்ராவும் துலைந்து போனோம் .....
அவள் எனக்காக வாட்ச் .கண்ணாடி ,மோதிரம் மிட்டாய் வாங்கித்தந்தாள்....
நீ எது வாங்கி தர மாட்டியா என்றாள்.....
பணம் இல்லையே என்றேன்.....
உன்கிட்ட ஏதாவது இருக்கா..?
இல்லை....
சரி வா வீடுக்கு போகலாம் என்றாள் .....
ஒரு வாரம்.....கழித்து ஊருக்கு போனாள்....
அழுத படி பிரிந்தோம்.....
ஆறேழு வருடம் கழித்து போன வருடம் வந்தாள் .....
அதிகம் பேசி கொள்ளவில்லை.....
ஆனால் பார்த்தாள்.....
நான் இல்லாத நேரம் பார்த்து....ஊருக்கு போய் விட்டாள்....
இந்த முறை....எனக்காக ஏதும் தரவில்லை.....
இருந்தாலும்.....நிலை கண்ணாடியில்
அவளின் ஸ்டிக்கர் பொட்டு.....
நான் போடும் சொப்பில் இரண்டு கூந்தல் முடி.....
மறந்து விட்டுவிடு போன டிஸ்கோ ரப்பர் ....
வேற ஏதும் விட்டுவிட்டு போகவில்லை......
"வீட்ல யாருமா கூரியர் வந்திருக்கு....."
அம்மா வாங்கி வந்தாள்.....
"என்னவாம்....."அப்பா கேட்க ....
சித்ராவுக்கு கல்யாணமாம் .....
உங்க அக்கா மெட்ராஸ் வர சொல்லிருக்காங்க ...."
கண்கள் குளமாகி.......... ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் .....
அன்புள்ள சித்ராவுக்கு பக்கத்தில் முற்று புள்ளியாய் விழுந்தது.....





இத்த்துடன்
முடித்து கொள்கிறேன்
அன்புடன்
ஆசிர் ...

No comments:

Post a Comment