என் கருவறை விழிகளுக்கு .....
உன் இமை காவலன் எழுதுவது......
கவிதை அருவி போல் உன் கூந்தல் ....
அதில் பூத்திருக்கும்...கனகாமரபூக்கள்.......
எட்டாவது வண்ண வானவில்லாய் உன் கரும் புருவங்கள்.....
விண்மீன்கள் பூக்கவில்லை ....வானத்தில்.....
மின்னுதே உன் கன்னத்து பருக்கள்.....
சிற்பிகளின் அற்புத படைப்பு உன் அழகான மூக்கு ...
ஆர்ச்சரிய குறி போல் உன் நெற்றி பொட்டு...
இரட்டை சகோதரிகள் போல ...உன் காது சிமிக்கி ...
சாயம் பூசாமல் சிவந்திருந்த உதடுகள்.......
சங்கு போல் இல்லை உன் கழுத்து ......
புன்னகைத்தால் மட்டுமே தெத்து பற்களின் அறிமுகம்....
இடை தெரியாமல் அணைத்திருக்கும் புடவை ...
தொட்டதும் கன்னிபோகும் ...பிஞ்சி கரங்கள்....
திரும்பி பார்க்கவைக்கும் உன் வளையல் ஓசை
மலர் தூவ வேண்டும் உன் பாதத்திற்கு .....
கட்டளை போட்டது உன் கால் கொலுசு ....
விடுகதை விழிகளே ....தூங்கிவிடாதே ....
இமைக்காமல் காத்திருக்கேன் பதில் எழுது......
No comments:
Post a Comment