அப்பா செய்தி பேப்பரில் மூழ்கி போயிருந்தார் ...
மூக்கு கண்ணாடி ..முன் தலை வழுக்கை சகிதம் அப்பா 55 ஐ கடந்திருந்தார்.... கிச்சனில் பாத்திரத்தை உருட்டும் சத்தம்...
"எல்லா வேலையையும் நான் ஒருத்தியே செய்யவேண்டிருக்கு ....
நமக்குன்னு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை ... "
அம்மா நான் ஏதாவது பண்ணனுமா....?
நீ ...." "உண் வேலையை சரியா பார்த்த போதும்....
கிளம்பும் போது ஷு எங்கே ,சாக்ஸ் எங்கேன்னு ...
என்கிட்ட கேட்காமல் இருந்தா சரி.....
உன்னோட டிபன் பாக்ஸ் அங்க வச்சிருக்கேன்...
எடுத்து பேக்ல வச்சிக்கோ ...மீதி வைக்காமல் சாப்பிடனும்....
உங்க அப்பா வேலைக்கு கிளம்பலையான்னு கேளு ....,
பேப்பரை படிச்சி என்ன பண்ண போறாரோ தெரியல ....? "
அப்பா ..."
"என்னடா வாசு..."
"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...."
அப்பா பேப்பரை மடித்து வைத்து விட்டு ...
"சொல்லு வாசு ஆபிஸ்ல ஏதாவது சொன்னங்களா ....?"
நான் ஏதாவது சொல்லனுமா..?
அது இல்லபா ...வாசு நிறையவே தயங்கினான் ....
வாசு நீ தடுமாடுரத்தை பார்த்தா நாங்க பயபடுரமதிரி ஏதோ சொல்ல போறேன்னு நினைக்கிறேன் .....
இருந்தாலும் சொல்லு ..."
"அம்மா நீங்களும் வாங்க ....."
வாடி ...இங்க உட்கார் ...உண் பையன் ஏதோ சொல்ல போறான் ....
மனசை திட படுத்திக்கோ ..."
"வாசு ....நீ பயப்படாதே ....'அம்மா உண் பக்கம் இருக்கேன்
உங்க அப்பாவுக்கு பயப்பட வேண்டாம்...."
அம்மா அப்பாவை பார்த்து சிரிக்க .... வாசு வாய் திறக்க ....
"வெயிட் வாசு.... நீ என்ன சொல்ல போறேன்னு நான் சொல்லவா ...?
"அப்பா விளயாடதீங்கபா ...."?
"ஐயோ வாசு எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு....?
என்னங்க அவனை சொல்ல விடுங்களேன் ...."
"இருடி ...அவன் சொல்றதுக்கு ஒரு வாரம் ஆகும்...."
"வாசு ...அப்பாகிட்ட சொல்லிடியா "
"இல்லமா...." "ஏன் வாசு உண் ஆபிஸ்ல ஏதாவது பொன்னை லவ் பண்றியா ...?"
"வாசு ..அப்பா என்னடா சொல்றார் நிஜமடா...?"
"அவர் சொல்றது கொஞ்சம் உண்மைதான்....."
"அப்படினா .....?அப்பா அவன் அருகில் தோளில் கை போட்டவர் ....
"வாசு நீ லவ் பண்றே....புரியுது ...யாருன்னு சொல்லு....?
இந்த விஷயத்துல ..நான் உண் பக்கம் இருக்கேன் அம்மாவுக்கு பயப்பட வேண்டாம்....
"அப்பா அம்மாவை பார்த்து சிரிக்க ..
அம்மா முறைத்தாள் ....
"அப்பா நான் சொல்லிடுறேன்....."
வீடு முழுவதும் நிசப்தம் நிலவ ....
அம்மா ,அப்பா ஒருவரைஒருவர் பார்த்துகொண்டார்கள் ....
"பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மலரை லவ் பண்றேன்.....
"இதை நான் எப்போவோ சொல்லிருக்கலாம்...
உங்க ரெண்டு பேருக்காகத்தான் யோசிச்சேன்...."
அம்மா வேக மாய் கிச்சனுக்குள் போய்விட்டாள்.....
குழப்பத்தோடு அப்பாவை பார்த்தான் வாசு.....
அம்மா திரும்பி வந்தாள் ...
"வாசு ஆ சொல்லு...." "எதுக்குமா ...?"
"வாயை காட்டு சொல்றேன்....."அவன் வாயில் சர்க்கரை போட்டாள் "அப்பா ...அம்மாவுக்கு என்னாச்சி...?
வாசு....போன வாரம் தான் உன்னையும் அந்த பொண்ணையும் பற்றி ...பேசிட்டு இருந்தோம்....
இப்போ நீயே சொல்றே....?
அதான் உண் அம்மாவுக்கு சந்தோஷம் தாங்க முடியல...."
ஆனாலும் வாய் பேச முடியாத ,காது கேட்காத பொண்ணுக்கு வாழ்க்கை தரதுக்கு பெரிய மனசு வேணும் ...
அது என் பையன்கிட்ட இருக்குன்னு நினைக்கும் போது...
பெருமையா இருக்குதுபா ..வாசு...."அப்பா வாசுவை கட்டி கொண்டார்... "தேங்க்ஸ் பா ..."
"நான் கூட சின்ன வயசுல இருந்து மலர் கூட இருந்திருக்கேன்....
அப்போ எனக்குள்ளே காதல் இருந்தான்னு தெரியலபா ....?
"....பட் போன மாதம்
..அவள் இல்லாத அந்த முப்பது நாட்கள் தான்பா ..
என் மனசுல மலர் இருக்கிறாள் ன்னு புரிஞ்சிக்கிட்டேன்....
லைப் புல்லா அவள் கூட நான் இருக்கனும்பா ....."
"டோன்வோர்ரி வாசு ....
நீ போய் மலர் கிட்ட உன்னை பற்றி சொல்லு...இப்பவே .... போ .."
"ஆல் தி பெஸ்ட் வாசு...."வாசல் வரை போனவன் ...நெகிழ்ந்து போனான்....
ஓடி வந்து அம்மாவை கட்டி கொண்டான்.....
"தேங்க்ஸ்மா .....".....
2...
"வாசு எங்கே .. போய்ட்டீங்க .....?ஆபிஸ் போகவில்லைன்னு அம்மா சொன்னங்க ....?"
""உங்களுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்ணினா தெரியுமா...?
"மலர் எங்கே....காணவில்லை....?"
"மலர் பீச் க்கு போயிருக்காள்...."
"தனியாகவா.....?வாசுக்கு ஆச்சரியமாய் இருந்தது.....""
"ம்ம் நீங்க இல்லை....போய்ட்டாள் ....:
"ஒகே கவிதா நான் போய்பார்கிறேன்....
" அவ்ளோ கூட்டத்தில் அவளை கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் வாசு....? "நான் இப்போவே மலரை பார்க்கவேண்டும்....."
கடற்கரை........லேசான மழை பெய்ய ...
அதையும் பொருட்படுத்தாமல் நிறைய காதலர்கள்...
கூட்டம் அதிகமாகவே இருந்தது......
மலர் தனியாக வந்திருப்பது மனசுக்கு நெருடலாகவே இருந்தது "மிஸ்டர் ...வாசு...." திடுக்கிட்டு திரும்பினான் ....
"நான் தான் வாசு நீங்க....?
அழகாய் ......தெரிந்தான்
"என் பேரு கெளதம் ....வாங்க வாசு பேசிகிட்டே போகலாம்....."
"எங்கே சார் ...அதுமில்லாம நீங்க யாருன்னு தெரியலியே...?"
"பிரெண்ட்ன்னு நினைச்சிக்கலாம்.....
பை தி பை ...நீங்க யாரையோ தேடறீங்க ன்னு நினைக்கிறேன்...."
கோபம் வந்தது...பேசாமல் நின்றான்.....
"மிஸ்டர் வாசு....மலரை தேடுறீங்க ன்னு எனக்கு தெரியும்....
மலர் உங்களை கூடிட்டு வர சொன்னாள்ன்னு சொன்னால் வருவீங்க ...
சோ கம் வித் மீ ....திரும்பாமல் சொல்லிவிட்டு முன்னால் நடக்க குழப்பத்தோடு பின் தொடர்ந்தான்......
மழையோடு தென்றலின் தீண்டல் தேகத்தை நடுங்க செய்தது போகும் திசையில் மலர் அமர்ந்திருந்தாள்......
அலைகளையே பார்த்துகொண்டிருந்தாள்.....
மலர் அழகானவள்
குறைகளை யாரிடமும் காட்டிக்கொள்ள விரும்பாதவள்
....ஓடி போய் அவளெதிரில் விழுந்தான்....
திடுக்கிடாள்....
கோபித்தாள்....
தலை முடியை கலைத்தாள்
..சட்டையை பிடித்து...இழுத்தாள்.....
வாசு நிலைகுலைந்து போனான்....
காலுக்கு கீழே பூமி நழுவியது போலிருந்தது....
அடியெடுத்து வைக்க கால்கள் அடம்பிடித்தது.....
கெளதம் ஆட்காட்டி விரலை நீட்டி வாசுவை காடினான்....
மலர் கண்களில் ஆச்சரியத்தையும்,சந்தோஷத்தையும் ஒரு சேர பார்த்தான்.... வாசு...
ஓடி வந்து.....வாசுவின் கைகளை பிடித்து இழுத்து சென்றாள்.....
கெளதமை காடினால்...
இது வரை பார்க்காத ....வெட்க ரேகைகள்....
பூவின் மேல் பனித்துளியை போல ...
அவள் முகத்தில்...மழை துளிகள்.....
வாசு,கெளதம் கொட்டும் மழையில் நனைந்துகொண்டு அமர்ந்திருக்க
நிறைய பேச துடித்தாள்........
கெளதம் பேசினான்...
முதன்முதலா கோவில்தான் பார்த்தேன்....
ஆனா இவள் என்னை முறைத்தாள்...
அவள் கொஞ்சமா சிரிக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்....
இன்னொரு நாள் கவிதா என்கிட்ட பேசினாள்...
இவளுடைய குறைகளை சொன்னாள்....
எனக்கு அது பெருசா படவில்லை...
எப்போ வரட்டும்...
அம்மா,அப்பாவோடு...உங்க வீடுக்கு ன்னு கேட்டேன்....
ஏதும் பேசாமல் ,சிரிசிகிட்டே ஓடி போய்ட்டாள்...
இன்றைக்கு உங்க முன்னாடி இருக்கோம்....
வாசு...மலர் உங்களை மனசுக்குள்ளே எங்க வச்சிருக்காள்ன்னு தெரியுமா....?அம்மா,அப்பா வுக்கு அடுத்த ஸ்தானத்தில்
எனக்கு உங்க மேல அளவு கடந்த மரியாதை வந்தது...
அது வரைக்கும்...நான் ஒரு சாராசரி மனுஷனாதான் யோசிச்சி வச்சிருந்தேன்...
உங்களை சந்திக்க ஆசை பட்டேன்....
மலர் இன்னைக்கும் தனியாதான் வந்தாள் ....
உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் வாசு..."
கெளதம்...இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை தரத்துக்கு ஒரு பெரிய மனசு வேணும் அது உங்க கிட்ட இருக்கு....
சோ...உங்களை சந்திச்சதில் நான்தான் சந்தோஷ படனும்...." "வாசு.....எதையுமே எதிர்பாரமல் வருவது ப்ரெண்ட்ஷிப் மட்டும்தான்...
ஒரு ஆணும் ,பெண்ணும்....nalla நண்பர்களா இருக்க முடியும்ன்னு நீங்க நிருபிசிருகீங்க ...வாசு...
உங்க ப்ரெண்ட்ஷிப் முன்னாடி என்னோட காதல் ஒன்றுமில்லை ....
கெளதம் யாதர்தமாய் சொன்னது நெத்தியடியாய் இருந்தது...
"ஏன் கெளதம் மழைல நனைந்துகொண்டே காதல் போராட்டமா.....?" இல்ல..வாசு...மலர்க்கு இந்த மழை பிடிச்சிருக்கு...
No comments:
Post a Comment